Friday, February 9, 2018

ஆசிரியருக்கு வகுப்பபறையில் வைத்தே தக்க பாடம் புகட்டிய மாணவி - காணொளி

பாரதி கல்லூரியின் 3 ஆம் ஆண்டு மாணவி தன்னிடம் நீண்ட நாட்களாக தவறாக நடந்து கொண்டு தனது ஆசைக்கு இனங்குமாறு பாலியல் ரீதியாக வற்புறுத்தி வந்த ஆசிரியரை வகுப்பறையில் வைத்தே ப்ளார் ப்ளார் என அறைந்துள்ளார். இதன் காணொளிகள் வெளியாகியுள்ளது. தனது அசிங்கம் அம்பலமாகிவிட்டதை அறிந்த ஆசிரியர் மாணவியிடம் கெஞ்சுகின்றார் ”எனக்கு குழந்தை உள்ளது இத இப்படியே விட்ரு யாரு கிட்டயும் சொல்லாத” என.
ஆசிரியருக்கு தக்க பாடம் புகட்டிய மாணவி இது குறித்து கல்லூரியின் பல்கலைகழக நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். நடவடிக்கை எடுப்பதற்கு பதில் புகாரை வாபஸ் வாங்கு இல்லை எனில் நீக்கி விடுவோம் என கல்லூரி நிர்வாகம் மிரட்டி வருவதாக கூறப்படகின்றது.
இதை தொடர்ந்து மாணவர்கள் மாணவிக்கு ஆதரவாக அந்த கல்லூரி முன்பு போராட்டமும் நடத்தியுள்ளனர். காணொளியில் தனது தவறை ஆசிரியரே ஒப்புக் கொண்ட போதும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என மாணவர்கள் கேள்வி எழுப்பி போராட்டம் நடத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval