Thursday, February 22, 2018

பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த சகோதரர் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக சகோதரர்கள்

Image may contain: outdoorஉறவினர்கள் யாரும் இல்லாதா நிலையில் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த சகோதரர் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக சகோதரர்கள்
பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த சகோதரர் சமியுல் ஈபா வயது 30 என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர் CMCH மருத்துவமனைக்கு கேன்சர் நோய் சிகிச்சைக்காக தனியாகவே வந்துள்ளார். தொடர் சிகிச்சை பெற பணமில்லாததினால் தன்னுடைய நாட்டிற்கு திரும்பி செல்ல காட்பாடி ரெயில் நிலையம் சென்ற நிலையில் இறந்து விட்டார்.
கடந்த எட்டு நாட்களாக அவரின் குடும்பத்தினரை, உறவினர்களை தொடர்புகொண்டும் எந்தவித பதிலும் இல்லாத காரணத்தினால், மாவட்ட தலைவர் ஏஜாஸ் அஹ்மது அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், நேற்று 21-02-18 மாவட்ட மருத்துவ சேவை அணி சார்பாக வேலூர் GH லிருந்து அச்சகோதரரின் உடலை பெற்று மாவட்ட பொருளாளர் ஜாகீர் உசேன் மு.மா.நிர்வாகி ஜாவித் முன்னிலையில் மதரஸயே ரஷீதியாவிற்கு கொண்டு சென்று நமது IPP பேரவை பொருளாளர் மெளலவி. இல்யாஸ் காஸிமி அவர்கள் மையத்தை குளிப்பாட்டி, கபனிட்டு நமக்கு சொந்தமான ஆற்காடு சாபித் அலிஷா மஸ்ஜித் கபரஸ்தானில் ஆற்காடு நகர தலைவர் முபாரக் அவர்களின் ஏற்பாடுகளில் நல்லடக்கம் செய்யப்பட்டது..
மாவட்ட மருத்துவ சேவை அணி
வேலூர் கிழக்கு தமுமுக

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval