Tuesday, February 27, 2018

மதம் பிடித்த யானையிடமிருந்து சாதுர்யமாக உயிர் தப்பிய பாகன்


கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள எட்டுமானூரில் திடீர் என மதம்பிடித்த யானையிடமிருந்து அதன் மேல் அமர்ந்திருந்த பாகன் சாதுர்யமாக பொதுமக்களின உதவியுடன்
உயிர் தப்பியுள்ளார். அதன் காட்சிகள் வெளியாகியுள்ளது.
எட்டுமானூரில் உள்ள கோவில் விழாவிற்கு வந்த யானைக்கு திடீர் என மதம் பிடித்து தும்பிக்கையை தூக்கிய படி கண்ணில் காண்பதை முட்டி தள்ளியது. இதை பார்த்தபொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.
மதம் பிடித்த யானையின் மீது அமர்ந்திருந்த பாகன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு செய்வதறியாமல் இருந்தார். யானை அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருந்தது. சிலர் யானையை
கோவில் தூணில் கட்ட முயற்சிக்கின்றனர்.
மேலும் துணிச்சலாக செயல்பட்ட சிலர் பாகனை காப்பாற்ற கோவில் மேற்பரப்பில் ஏறுகின்றனர். பின்னர் யானை நிற்கும் இடத்திற்கு நேர் மேலாக நின்று கயிற்றை போடுகின்றனர். அதை பிடித்துக் கொண்டு பாகன் லாவகமாக மேலே ஏறி உயிர் தப்பினார்.
இதை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர். அதன் காட்சிகள் வெளியாகியுள்ளது.
இதில் நான்கு பேர் காயமடைந்ததாக கூறப்படுகின்றது. பின்னர் யானை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval