Thursday, February 8, 2018

சினிமா பாணியில் கொலையை மறைக்க முயன்று வசமாக சிக்கிய கொலையாளி!

Image
நகைக்காக கொலை செய்து சினிமா பாணியில் கொலையை மறைக்க மிளகாய்ப்பொடி தூவி தப்பிக்க முயன்ற கொலை குற்றவாளியை புதுச்சேரி காவல்துறையினர் 12 மணி நேரத்தில் கைது செய்தனர். 

புதுச்சேரி ரெட்டியார் பாளையம் ரோஜா நகரில் பிரபுதாஸ் என்பவர் மனைவி தீபாவுடன் வசித்துவந்தார்.
இந்நிலையில் தீபா வெளியே செல்லும் நேரம் பார்த்து வீட்டில் உள்ள நகைகளை கொள்ளையடிக்க எதிர் வீட்டில் வசிக்கும் மென்பொருள் பொறியாளரான கிரிதரன் சதித் திட்டம் தீட்டியுள்ளார். 

அவர் எதிர்பார்த்தது போலவே கடைக்கு சென்ற தீபா வீட்டிற்கு திரும்பி
வந்த போது கிரிதரன் திருடிக்கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதைப்பார்த்துப் பயந்துபோன கிரிதரன், தீபாவின் தலையில் கம்பால் அடித்தும், கழுத்தை நெறித்தும் கொலை செய்தார். 

பின்னர் கொலைக் குற்றத்தில் தம்மை போலீசார் கைது செய்துவிடுவார்கள் என பயந்த கிரிதரன், வீடு முழுவதும் மிளகாய்பொடியைத் தூவிவிட்டுச் சென்றுவிட்டார். 

இந்நிலையில், வீடு திரும்பிய தீபாவின் கணவர் பிரபுதாஸ் ரெட்டியார் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் விசாரணையில் முன்னுக்குப் பின் முரணான தகவலையளித்த கிரிதரன் பின் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். 
Image

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval