Saturday, February 24, 2018

கிட்ட வந்த அறுத்துடுவேன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய நபர் கோவை கலெக்டர் அலுவலகம்

நேற்று ஈரோட்டில் நள்ளிரவு மின்சார கம்பியில் ஏறி நடந்து ஆட்டம் காட்டிய அதே நபர் இன்று கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தனது கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
2 குழந்தைகளுடன் கோவை கலெக்டர் ஆஃபிசிற்கு வந்த ஆங்கிலோ இந்தியன் ஆனா ஐரின் திடீர் என தனது கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு தற்கொலை செய்யப் போவதாக அங்கிருந்தவர்களிடம் கூறியுள்ளார்.
”கலெக்டர் இப்ப இங்க வரனும் ஐ வாண்டு சி கலெக்டர்” எனக் கூறிய படி தனது கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டார் ஐரின். மீடியாவும் இப்ப இங்க வரனும் எனக்கு நியாயம் வேண்டும் எனக் கூறிக் கொண்டிருந்தார் ஐரின்.
நான் இப்ப உங்களுக்கு வெடிக்கை காட்றேன் பாருங்க என்னைய நானே கொல்லப் போறேன் பாருங்க என அங்கிருந்த அதிகாரிகளிடம் கூறுகின்றார் ஐரின்.
போலிசார் அவரது அருகில் செல்ல முயலும் போது ”கிட்ட வந்தா அறுத்துடுவேன்” என நீண்ட நேரமாக கூறுக் கொண்டிருந்தார் ஐரின். ஒரு கட்டத்தில் தனது கழுத்தையும் லேசாக அறுத்தும் கொண்டார்.
தனது நிலத்தை சிலர் அபகரிக்க பார்ப்பதாகவும் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கு நியாயம் வேண்டும் எனக் கூறுகிக் கொண்டிருந்தார் ஐரின்.
இறுதியில் சினிமாவில் வருவது போன்று கலெக்டர் அலுவலகத்தில் ட்ரைவராக பணிபுரியும் ஜீவா என்பவர் சாதுர்யமாக செயல்பட்டு அவரது அருகில் சென்று கத்தியை பறித்து அவரை காப்பாற்றினார்.
பின்னர் ஐரினை மருத்துவமனையில் சேர்த்தனர். அவருடன் வந்த குழந்தைகள் தனது குழந்தைகள் தான் எனவும் ஐரின் கூறினார். தற்போது அந்த குழந்தைகள் ஐரினுடன் மருத்துவமனையில் உள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval