Friday, February 2, 2018

​கோவையில் பெண் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் மேற்குவங்கத்தில் கைது!


Image
கோவை அருகே பெண்ணை கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிய வடமாநில தொழிலாளர்கள் 3 பேரை தனிப்படை போலீசார் மேற்கு வங்கத்தில் கைது செய்துள்ளனர். 

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கனுவக்கரை கிராமத்தை சேர்ந்த விவசாயி மயில்சாமி தனது வீட்டில் டைல்ஸ் ஒட்டும் பணியை கடந்த மாதம் 26-ம் தேதி மேற்கொண்டார். 

இப்பணியில் வடமாநில தொழிலாளர்கள் சாம்ராஜ், பிந்து, அஜய் ஆகிய மூன்று பேர் ஈடுபட்டுள்ளனர். அப்போது நள்ளிரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மயில்சாமியின் மனைவி ராஜாமணியை கொலை செய்துவிட்டு, 8 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். 

மயில்சாமியை கட்டி வைத்து மின்சாரம் பாய்ச்சி கொலை செய்யவும் முயன்றுள்ளனர். இது தொடர்பாக போலீசார் தன்னிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். 
இதனிடையே அவர்களின் செல்போன் அழைப்புகளை வைத்து விசாரணை நடத்தியதில் மூன்று பேரும் மேற்குவங்கத்தில் இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார், அவர்களை கைது செய்தனர். அவர் மூவரையும் இன்றோ அல்லது நாளையோ தமிழகம் அழைத்து வர போலீசார் திட்டமிட்டுள்ளனர்.  
Image

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval