Friday, October 2, 2015

பாலைவனத்தில் 5 ஆயிரம் ஆண்டுகளாக குடிநீர் வழங்கும் ஜம்ஜம் கிணறு!

மெக்கா: சவூதி அரேபியாவில் மெக்காவின் கஃபாவுக்கு அருகே அமைந்துள்ளது ஜம் ஜம் கிணறு 5 ஆயிரம் வருட வரலாறு கொண்ட இக்கிணற்றின் நீரை, உலகில் உள்ள பெரும்பாலான‌ முஸ்லிம்கள் அருந்தியிருப்பார்கள். மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொள்ள உலகில் பல தேசங்களில் இருந்து வரும் முஸ்லிம்கள் இந்த புனித கிணற்று நீரை குறைந்தது 20 லிட்டராவது எடுத்து தங்களது நாட்டிற்கு செல்வார்கள்.


ஒரு முறை ஜரோப்பா மருத்துவர்கள், சுகாதாரத்திற்காக இந்த கிணற்றினை சுத்தப்படுத்த வேண்டும் என்று சவூதி அரசுக்கு ஆலோசனை கூறினார்கள். இதை ஏற்றுக்கொண்ட சவுதி அரசு 8 அதி நவின ராட்சத பம்பு செட்டுளை கொண்டு தொடர்ந்து இரவும், பகலுமாக 15 நாட்கள் இந்த நீரை இறைத்தது. ஆனால் நீரின் அளவு குறையவில்லை. மாறாக நீரின் மட்டம் ஒரு அங்குலம் உயர்ந்து இருந்தது. ஒரு வினாடிக்கு 8 ஆயிரம் லிட்டர் என்ற அளவில், தினமும் 691.2 மில்லியன் லிட்டர் தண்ணீரை தொடர்ச்சியாக ராட்சத மோட்டார்கள் மூலம் இந்த கிணற்றுத்தண்ணீர் உறிஞ்சப்படுகிறது.

நல்ல நீர் வளம் உள்ள ஒரு பெரிய கிணற்றில் உள்ள நீரை ஒரு வருடம் எடுக்கும் அளவு நீரை, ஒரே நாளில் 'ஜம் ஜம்' கிணற்றில் இருந்து எடுக்கபடுவது மிகப்பெரிய அதிசயம், அதை விட அதிசயம் மில்லியன் கணக்கில் நீரை தினமும் எடுத்தும், அப்போதும் இதன் அளவு குறைவதில்லை. சுவையும் மாறியதில்லை.ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் உலகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் அங்கே குழுமுகிறார்கள். அனைவருக்கும் இந்தக் கிணற்றில் இருந்து தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

 குறைந்த அளவே ஆழம் உள்ள இந்தக் கிணறு, பாலைவனத்தில் அமைந்துள்ள இந்தக் கிணறு, அருகில் ஏரிகளோ கண்மாய்களோ குளம் குட்டைகளோ இல்லாத அந்தக் கிணற்றில் இருந்து லட்சோப லட்சம் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என்பது ஆச்சரியப்படவைக்கிறது. பெரும்பாலான‌ நீர் ஊற்றுகள் சில வருடங்களிலோ பல வருடங்களிலோ செயலிழந்து போய் விடும். ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது அற்புதமாகும். ஜம் ஜம் கிண்று அருகே எந்த தாவரமும் வளருவதில்லை.எந்த ஒரு நீர் நிலையாக இருந்தாலும் பாசி படிந்து போவதும் கிருமிகள் உற்பத்தியவதும் இயற்கை. இதனால் தான் குளோரின் போன்ற மருந்துகள் நீர் நிலைகளில் கலக்கப்படுகின்றன. ஆனால் ஜம்ஜம் தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த மருந்துகள் மூலமும் அது பாதுக்காக்கப்படாமல் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வது. மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது என்பது அறிவியலின் முடிவாகும். ஆனால் இந்தத் தண்ணீர் 1971 ஆம் ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதித்துப் பார்க்கப்பட்ட போது இது குடிப்பதற்கு மிகவும் ஏற்ற நீர் என்று நிருபிக்கப்பட்டது .பூமியிலுள்ள நீரில் மிகச்சிறந்தது 'ஜம் ஜம்' நீர் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள். பொதுவாக மற்ற நீரில் இருந்து ஜம்ஜம் தண்ணீர் வேறுபட்டுள்ளதும் சோதனையில் தெரிய வந்துள்ளது. கால்ஷியம் மற்றும் மேக்னீஷியம் எனும் உப்பு மற்ற வகை தண்ணீரை விட ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக உள்ளது
 தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உப்புக்கள் புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை என இத்தண்ணீரை பருகியவர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் இந்தத் தண்ணீரில் ஃபுளோரைடு உள்ளது இது கிருமிகளை அழிக்க வல்லது. உலகம் முழுவதும் ஏராளமான ஆச்சரியங்களும் அற்புதங்களும் நிகழ்ந்து வந்தாலும் தினசரி லட்சக்கணக்கான‌ மக்களுக்கு அந்தத் தண்ணீர் குடி நீராகப் பயன்படுவதும் அதுவும் பாலைவனத்தில் இந்த அதிசயம் பல்லாயிரம் ஆண்டுகள் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

source : Tamil Dinakaran world

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval