Sunday, April 24, 2016

படித்ததில் பிடித்தது சிரிக்க மட்டுமே..

நேத்திக்கு ஒரு தமிழ் பேய் படம் பாக்க போயிருந்தேன்.
ஷோ முடியும்போது இரவு சுமார் 9.45 மணி இருக்கும் . என்னை வீட்டிற்கு அழைத்து செல்வதாக சொன்ன ஆட்டோவ காணோம் .
போன் பண்ணா " சார் , இங்க ஒரு இடத்துல மாட்டிகிட்டேன் நீங்க வேற ஒரு ஆட்டோவில வீட்டுக்கு போய்டுங்க " ன்னு சொன்னான் .

ஆட்டோ கெடைக்கல . OLA வுக்கு போன் பண்ணா 35 நிமிஷம் ஆகும்னு சொல்லிட்டான் .
மெல்ல இருட்டில் நடக்க ஆரம்பித்தேன் .
விளக்குகளே போடாமல் ஒரு பஸ் வந்தது - அதுவும் எங்க ஏரியா வுக்கு போற வண்டி .
வண்டி மிக மிக மெதுவாக நகர்ந்து வந்தது .
கை காட்டியும் அது நிற்கவில்லை . பேய் படம் பாத்த effect என் மன்சுலேருந்து மறயல .
யோசிக்காமல் ஓடிப் போய் வண்டியில் ஏறிக்கொண்டேன் .
டிரைவர் மாத்திரம் உட்கார்ந்திருந்தார் .
என்ஜின் சத்தம் கேக்கலை .
conducter மற்றும் பயணிகள் யாரும் இல்லை
ஆனால் வண்டி மெதுவாக நகர்ந்து கொண்டு இருந்தது .
மனசு படக் படக் என்று அடித்துக் கொண்டது .
நடக்கறது ஒரு வேலை நாம பாத்த படத்தோட பார்ட் 2வா இருக்கோன்னு பயம்.
திடீர்ன்னு என்ஜின் பகுதியிலேருந்து ஒரு பெரிய சத்தம் -
விளக்குகள் எரிய ஆரம்பித்தன ......
தட தட வென நடத்துனரும்
சுமார் 20 பயணிகளும் வண்டிக்குள் ஏறினார்கள் .
என்னைப் பார்த்து " எருமை மாடு ,
வண்டி நின்னு போச்சுன்னு இவ்வளவு பேரு பின்னாலே இருந்து
உயிரை குடுத்து தள்ளிகிட்டிருக்கோம் ,
நீ ராஜா மாதிரி ஏறி உக்காந்துகிட்டியே ?
அறிவு இருக்கா உனக்கு"ன்னு
செம டோஸ் விட்டாங்க .

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval