Tuesday, April 12, 2016

உழைப்பு தருகின்ற கம்பீரம்!

 கையளவு துணி இருந்தாலும் 
கால்மேல் கால்போட்டு
கம்பீரமாய் பொதுஇடத்தில் உட்காரமுடிகிறது என்றால் அது உடை தரும் கம்பீரமல்ல,
உழைப்பு தருகின்ற கம்பீரம்!
கார், பணம், பதவி பார்த்து வருகின்ற மரியாதைகள்
அவை போனதும்
அவைகளோடே போய்விடும்,
உழைப்பின் மூலம் வருகின்ற மரியாதைகள் உயிர்போனாலும் போவதில்லை!
கோவணத்தோடு நின்றாலும் குன்றின் மீது ஏறி கர்வமாய் நிற்கக்கூடிய
தைரியம் கடவுளுக்கு பின் விவசாயிக்கு மட்டுமே இருக்கிறது!
படைப்பது மட்டுமல்ல
பயிரிடுவதும் கூட
கடவுள் தொழில் தான்!!

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval