Saturday, April 23, 2016

முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் அ தி.மு.கவில் இணைந்தார்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் அ.தி.மு.கவில் இணைந்தார். அவரோடு அக்கட்சியின் சில மாவட்டத் தலைவர்களும் அ.தி.மு.கவில் இணைந்தனர்.
அதேபோல, தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் என். செல்வராஜ் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.
அவரோடு, குளித்தலை, முசிறி பகுதிகளைச் சேர்ந்த சிலரும் அ.தி.மு.கவில் வெள்ளிக்கிழமையன்று இணைந்தனர்.
மதுரையிலிருந்து செயல்பட்டுவரும் சைவ மடமான மதுரை ஆதீனத்தின் மடாதிபதியான அருணகிரி அ.தி.மு.கவிற்காக பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval