Friday, January 1, 2016

சென்னை ஜாம்பஜாரில் பட்டப்பகலில் ரூ.11 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை!

jam bazar
சென்னை ஜாம்பஜாரில் முகமூடி அணிந்த நபர்கள், நகைக்கடைக்குள் புகுந்து அரை கிலோ தங்கம் மற்றும் ரூ.11 லட்ச ருபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சென்னை ஜாம்பஜாரில் நகைக்கடை நடத்தி வருபவர் சாகர். இன்று காலை வழக்கம் போல் கடையை திறந்த அவர், கடை  ஊழியரிடம் கடையை பார்த்துக் கொள்ள கூறி விட்டு வெளியே சென்று விட்டார்.
அந்த சமயத்தில்  முகமூடி அணிந்து கொண்டு கடைக்குள் புகுந்த 5 பேர் கொண் கும்பல் கடையில் இருந்த ஊழியரை கத்தியை காட்டி மிரட்டியுள்ளது. பின்னர் கடையில் இருந்த அரை கிலோ தங்கம் மற்றும்  11 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் கொள்ளையடித்து விட்டு ஓடி விட்டது.
இந்த சம்பவம் குறித்து ஜாம் பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடையில் வைக்கப்பட்டிருந்த  கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval