Thursday, January 28, 2016

ஆட்டோ டிரைவர் ஆகாய விமானியான கதை!

முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் ஸ்ரீகாந்த் பண்டவானா.
ஸ்ரீகாந்த் நாக்பூர் நகரில் ஒரு "செக்யூரிட்டி" யின் மகனாகப் பிறந்தார்.
பள்ளியில் பயிலும் போதே "டெலிவரி பாய்" "ஆட்டோ டிரைவர்" என கிடைத்த வேலையை செய்தவர்.
அடிக்கடி மும்பை விமான நிலையம் வரை சரக்கு "டெலிவரி" செய்ய போனவருக்கு தானும் ஒரு விமானியாக வேண்டும் என்ற எண்ணம் துளிர்விட ஆரம்பித்தது. ஒருநாள் தற்செயலாக அங்குள்ள "கான்டீன்" உரிமையாளரிடம் பேசிக் கொண்டு இருந்த போது, விமானம் இயங்கும் பைலட் களுக்கான தேர்வு நடப்பதை தெரிந்து கொண்டார்.
சிவில் ஏவியேஷன் நடத்தும் இந்த சிறப்பு தேர்வில் கலந்து கொள்ள தன்னை தயார் படுத்த நினைத்தார்.
அதற்கு முன்பாக , மத்திய பிரதேசத்தில் உள்ள "விமானபயிற்சி பள்ளி" -யில் நுழைந்தார்.
அங்கு கவனமாக பயின்று் அதன் மூலம் நல்ல ஊக்கத்தொகையும் பெற்றார்.
அதன் பிறகு ஒரு நல்ல பயணிகள் விமானத்தை இயக்கும் ஒரு கைதேர்ந்த விமானியாக சான்றிதழ் பெற்றார்.
சர்வதேச பொருளாதார மந்த நிலை ஏற்பட்ட போது "பட்ஜட்" ரக விமானங்களை இயக்கினார்.
குறிப்பாக,"கோ பைலட்"ஆக பணியாற்றினார்.
இப்பொழுது, ஏவியூஷன் துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றுகிறார். .
ஆகாயத்தில் அந்தஸ்து வேண்டும் என்பதை விட,
உழைப்பும், விடா முயற்சி வேண்டும் என்பது நூறு சதவீத உண்மை!
‪#‎முயற்சி‬ திருவினையாக்கும்!

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval