Wednesday, January 13, 2016

குவைத்:இந்தியா:தமிழகம் சார்பில் வேண்டுகோள்:

குவைத்:இந்தியா:தமிழகம் 
உங்களால் முடிந்த அளவு பகிர்வு செய்து நமது உடன் பிறப்புகளுக்கு உதவுங்கள்
மத்திய அரசுக்கும் மற்றும் தமிழக அரசுக்கு குவைத் வாழ் இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் சார்பில் வேண்டுகோள்:
ஜனவரி 12:2016
குவைத் அரசு ஜனவரி 10(2016) ஆம் தேதியில் இருந்து அனைவருக்குமான பிழையுடன் கூடிய பொது மன்னிப்பு வழங்கி உள்ளது:
மகிழ்ச்சியாக செய்தி தான்
ஆனால் அதில் அபராதம் கட்டி விட்டு தான் செல்ல வேண்டும் என்ற நிபந்தனை கடுமையாக உள்ளது
இங்கே பிரச்சினையின் அடிப்படையில் உள்ள நம் இந்திய தொழிலாளர்கள் மிகவும் வறுமை நிலையில் உள்ளவர்கள்.
இதில் 95% இந்தியர்களும் குவைத் அரசு அறிவித்துள்ள அதிகபட்ச தொகையான 600 குவைத்தி தினார் கட்டி விட்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளவர்கள். இந்த பெரிய தொகை நம் தொழிலாளர்கள் பிழையாக கட்டி தாய்நாட்டுற்கு செல்வது சாத்தியம் இல்லாதது.
மத்திய மாநில அரசும் குவைத் இந்திய தூதரகமும்
குவைத் அரசுடன் பேசி கருணையுடன் அபராத தொகையை முற்றிலும் தள்ளுபடி செய்திட பேச்சு வார்த்தை நடத்தி இந்த பொதுமன்னிப்பு அனைவருக்குமானதாக இருந்தாலும்
குவைத் வாழ்
இந்தியர்களின் நலன் கருதி
அபராத தொகை கட்டாமல் செல்ல
வழி வகையை ஏற்படுத்தி தரும்படி இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் சார்பாக,
இப்படிக்கு
குவைத் இந்தியர்கள் நலத்தில்
குவைத்தில் உள்ள அனைத்து இந்திய அமைப்புகள் மற்றும் தமிழக அமைப்புகள் சார்பில்
""""Kuwait- தமிழ் பசங்க"""
நகல்: குவைத் இந்திய தூதரகம்
மத்திய அரசு
தமிழக அரசு

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval