Tuesday, January 26, 2016

அதிரை கல்லூரியில் மாணவி தற்கொலை..


அதிராம்பட்டிணம் காதிர்முகைதீன் கல்லூரியில் பி.ஏ., தமிழ் முதலாம் ஆண்டு மாணவி சுலேக்ஷன வயது 18 , தந்தை பெயர் எல்.ஐ.சி.முகவர் சங்கர், அவருக்கு நான்கு பெண்குழந்தைகளில் இவர் மூன்றாவது நபர். அதிராம்பட்டிணம் ஆறுமுக கிட்டங்கி தெருவில் வசித்து வருகின்றனர்.
இன்று குடியரசு தின விழா கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் கல்லூரியில் நடைபெற்று வந்தது இந்நிலையில் என்.சி.சி பயிற்சியின் போது சரியாக செயல்படவில்லை என சீனியர் மாணவிகள் திட்டியதால் ஏற்பட்ட அவமானத்தில் கல்லூரி வளாகத்தில் 45 வது அறையில் உள்ள மின் விசிறியில் தனது சுடிதார் துப்பட்டாவினால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பட்டுக்கோட்டை ஏ.எஸ்.பி அரவிந்த்மேனன் உத்தரவின் பெயரில் அதிராம்பட்டிணம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவிகள் சிலரை அழைத்து விசாரனை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தினால் அதிராம்பட்டிணம் பகுதி பரப்பரப்பாக காணப்படுகிறது. போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval