Tuesday, January 19, 2016

நீங்கள் அறிந்திராத தமிழ்மொழி பற்றிய சில உண்மைகள்

download (2)
உலகின் மிகத் தொன்மை வாய்ந்த மொழிகளுள் ஒன்று தான் தமிழ்மொழி. இதனை உணர்த்தும் விதமாக உலகின் பல
 இடங்களில் தமிழ்மொழியின் வடிவத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் பல கிடைத்துள்ளன. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கு முந்தியது. ஆகவே தமிழ்மொழியானது சுமார் 2300 ஆண்டுகளுக்கும் முன்பிருந்து இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
உலகில் சுமார் 72 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தமிழ்மொழியை பேசுகின்றனர்.
உலகத்தில் தமிழ் பேசும் மக்களில் கால் அளவு மக்களுக்கு தமிழைப் படிக்கவோ, எழுதவோ தெரியாது.
நம் தமிழ்மொழி திராவிட குடும்பத்தைச் சேர்ந்த ஓர் முதன்மையான மொழியாகும்.
தமிழ்மொழி தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் பாண்டிச்சேரிகளில் தான் அதிகம் பேசப்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதிகளில் தமிழ்மொழியே அரசு அலுவல் மொழியாக உள்ளது.
உலகில் 6809 மொழிகள் உள்ளன. அதில் பேசும் மற்றும் எழுதும் மொழிகள் 700, தனி எழுத்துக்களைக் கொண்ட மொழிகள் 100. அதில் ஆறு பொது மொழிகள். அவை ஹிப்ரூ, கிரேக்கம், லத்தின், சமஸ்கிருதம், சீன மற்றும் தமிழ். ஆனால் அதில் தமிழ், சீன மற்றும் ஹிப்ரூ மொழிகள் தான் இன்று வரை பேசப்பட்டும், எழுதப்பட்டும் வருகின்றது.
உலகில் மனிதர்களுக்கு தெரிந்த முதல் மொழி தமிழ் என்பதை ஆய்வாளர் அலெக்ஸ் கோலியர் கூறுயிருக்கிறார்.
தமிழ்மொழியானது கிட்டத்தட்ட 22 விதமாக மக்களால் பேசப்பட்டு வருகிறது.
உலகிலேயே இடமிருந்து வலமாக எழுதப்படும் மொழிகளில் மிகவும் பழமையானது தமிழ் மட்டும் தான். எப்படி தமிழ் எழுதப்பட்டதோ, அதேப் போல் தான் இன்று பல மொழிகள் இடமிருந்து வலமாக எழுதப்படுகின்றன.
இதுவரை இந்தியாவில் கிடைத்த 1 லட்சம் கல்வெட்டுக்களில் 60,000-த்திற்கும் அதிகமானவை தமிழிலும், மற்ற மொழிகள் 5 சதவீதத்திற்கும் குறைவான கல்வெட்டுக்களையும் கொண்டுள்ளன. இதிலிருந்து குமரி கண்டத்தில் தோன்றிய முதல் மொழி தமிழ் என்று கூறலாம்.
தமிழ் மொழியைக் கற்கும் போது, முதலில் நாம் கற்கும் எழுத்து அ, அதேப் போல் முதற்சொல் ‘அம்மா’. இதை யாராலும் மறுக்க முடியாது. இச்சொல் தமிழ் கோட்பாட்டைப் பிரதிபலிக்கிறது. எப்படியெனில், அ என்னும் எழுத்து உயிர் எழுத்தையும், ம் என்னும் எழுத்து மெய் எழுத்தையும், மா என்னும் எழுத்து உயிர்மெய் எழுத்தையும் குறிக்கிறது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval