Thursday, January 14, 2016

-படித்ததில் சிரித்தது -


Image result for laughing imagesவாசனை வராம கோழிக்குழம்பு வைக்கணுமா, ஏங்க?
பக்கத்து வீட்டுக்காரன் கோழியை தேடிட்டு இருக்கான்…!
--------------------------------------------
Wife : நீ தான் husband டா வர போறேனு  school படிக்கும் போதே மிஸ் சொல்லிடாங்க....!!!
Husband : அப்படியா ..ஆச்சிரியம்மா இருக்கே ..!!
Wife : ஆமா .!! நீயேல்லாம் பெரியவளாகி பன்னி மேயக்கதான் லாயக்குனு சொல்லுவாங்க...!!
--------------------------/-----//------
என்கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்த பிறகு சேஞ்ச் இருக்கா?
பஸ்ல போகக் கூட சேஞ்ச் இல்ல டாக்டர்.!
- --------------------------/-----//------
என் மனைவிக்கு கோபம் வந்தா பத்திரகாளியாயிருவா!”
“என் மனைவி ‘பாத்திர’ காளியாயிருவா!”
-------------------------------------------/-
ஏங்க, நான் சாம்பார்ல புளி போடறதுக்கு
மறந்திட்டேன்…கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..!
பரவாயில்லை, நீ சமைக்கப் போறேன்னு சொன்னதுமே
ஏற்கனவே வயித்திலே புளிய கரைச்சிடுச்சி…!
--------------------------/-----//------
தொழிற்சாலைக்குப் பக்கத்திலே கிளினிக் ஓப்பன்
பண்ணாதேன்னு சொன்னேனே, கேட்டியா..?
-
பாரு..நீ ஆபரேசன் பண்ணும்போதெல்லாம் சங்கு
ஊதறாங்க...!
--------------------------/-----//------
எவ்வளவு பெரிய கட்டுப் போட வேண்டிய அளவுக்கு உன்
புருஷன் காதுல எப்படி அடிபட்டது?”

“நீதானடி சொன்னே… தோசைக்கல் வாங்கினதை
மறைக்காதே, உன் புருஷன் காதுல போட்ருன்னு.”
------------------------------------------/-
கட்டுன பொண்டாட்டியை கை நீட்டி அடிக்கிறியே
நீயெல்லாம் ஒரு மனுஷனா?
கயிறால கட்டாம விட்டிருந்தா, அவ என்னை அடிச்சிருப்பா.…!!
------------------------------------------/-
உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி
இருக்கிறதை ஏன் என்கிட்ட சொல்லல?"
"சொல்லலையா.... உன்னை ராணி மாதிரி
வச்சுப்பேன்னு அன்னைக்கே சொன்னேனே"
------------------------------------------/-
எனக்கு ’98’ லே குழந்தை பொறந்தது…!, உனக்கு?
-
‘108’_லே..!
------------------------------------------/-
"என்னாடா  ? தலையில இவ்வளவு பெரிய கட்டு ?? என்னாச்சு ??"
"அது ஒண்ணும் இல்ல பாஸு....என் பொண்டாட்டி நேத்து வாழைபழ தோல் வழுக்கி கீழே விழுந்துட்டா... "
"உங்க பொண்டாட்டி விழுந்தா அவங்க தானே கட்டு போடணும்... நீங்க எதுக்கு கட்டு போட்டுருக்கீங்க ??? "
"கீழே விழும் போதும் கொஞ்சம் சத்தமா சிரிச்சுட்டேன்... அதான் இப்படி... "
------------------------------------------/-
மன்னா ! அண்டை நாட்டரசன் குதிரையில் வந்து
நம் அரசியை கடத்திச் சென்று விட்டான்...!
ராணி சத்தம் போடவில்லையா?
''சீக்கிரம்..சீக்கிரம்..'' என்று அலறினார்கள், மன்னா..!
------------------------------------------/-
பல் மருத்துவர் : பல்லு எப்படி விழுந்துச்சு
வந்தவர் : அத யார்கிட்டயாவது சொன்னா மீதி பல்லும்
கொட்டிடும்னு எம் பொண்டாட்டி சொல்லிருக்கா..
------------------------------------------/-
உங்க கணவரிடம் உங்களுக்குப் பிடிக்காத விஷயம் எது?”
அந்த ஆளையே பிடிக்காது!”

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval