Friday, January 15, 2016

மனிதநேய மக்கள் கலாச்சார பேரவையின் அமீரக மண்டல செயற்குழு கூட்டம்


இறைவனின் திருப்பெயரால்..
இன்று 15/01/2016 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு மனிதநேய மக்கள் கலாச்சார பேரவையின் அமீரக மண்டல செயற்குழு கூட்டம் ம.ம.க மாநில அமைப்பு செயலாளர் H.ராசுதீன் அவர்கள் தலைமையிலும்  அமீரக செயலாளர் மதுக்கூர் S.அப்துல் காதர் அவர்கள் முன்னிலையிலும் ஷார்ஜா மர்கஸில் நடைபெற்றது.
.

கூட்டத்தை முகம்மது ஆசிக் மிஸ்பாஹி கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்.அமீரக மண்டல பொருளாளர் அதிரை அஷ்ரப் வரவேற்புரை நிகழ்த்தினார்.அமைப்பு செயலாளர் ராசுதீன் அவர்களும்,அமீரக செயலாளர் மதுக்கூர் அப்துல் காதர் அவர்களும் ஆலோசனைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் விரிவாக பேசினர்..அதனைத்தொடர்ந்து  மண்டல நிர்வாகிகள் தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை கூறினர்..


அபுதாபி,துபை,ஷார்ஜா, அல்அய்ன் மண்டல நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..
*வெளிநாடுவாழ் தமிழர்களின் நலன்காக்க தனிஅமைச்சகம் அமைக்க வலியுறுத்தி ம.ம.க பேரவை சார்பில் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்தை பிப்ரவரி 10 ம் தேதிக்குள் முடித்து அதனை இந்திய தூதரகத்தும்,தலைமை செயலாளருக்கும் நேரில் சென்று அளிப்பது என்றும்,
*கல்வி மற்றும் மருத்துவ உதவிகளில் அதிகம் கவனம் செலுத்துவது என்றும்,
*மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைக்கு அமீரக ம.ம.க பேரவை சார்பில் வாகனம் வழங்குவது என்றும்,*மார்க்க பிரச்சாரங்கள் தொய்வின்றி நடைபெற தாயிக்களை அதிகப்படுத்துவது என்பன போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அமீரக  துனைசெயலாளர் K.M.A.முகம்மது அலி ஜின்னா நன்றி கூற துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது..
தகவல் N.K.M. அஸ்ரப் அலி 
Dubai. U.A.E.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval